அதிர்ச்சி வீடியோ: டோல்கேட் பூத்தையே அடியோடு தூக்கி சென்ற வேன், பறிபோன அப்பாவி உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


சுங்கச்சாவடியில் சரக்கு வேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில்  உள்ள பூத் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.

கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடியில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று (டிசம்பர் 1) ஆம் தேதி பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு வேன்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே வந்தது.

அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த சரக்கு வேன், தாறுமாறாக அங்கும் இங்கும் தறிகெட்டு ஓடி அங்கிருந்த டோல் பூத்தின் மீது மோதியது. இதில் பூத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற சரக்கு வேன், அந்த வழியாக சென்ற இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. சரக்கு வேன் மோதியதில் இருசக்கர வாகன ஓட்டிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுங்கச்சாவடி பூத்தில் இருந்த கவிதா என்கிற பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சரக்கு வேன் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in krishnagiri tollgate


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->