திருமணம் முடிந்த 7 நாளில் கணவனுடன் சென்ற பெண்ணிற்கு அரங்கேறிய சோகம்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் ஆன பாலமுருகனுக்கு செம்படங்குறிச்சியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருடன் 7 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றிருக்கின்றது.

இந்த நிலையில், நேற்று மாலை பாலமுருகன், பிரியதர்ஷினி மற்றும் அவருடைய தம்பி மூவரும் இருசக்கர வாகனத்தில் கள்ளகுறிச்சி நோக்கி பயணித்துள்ளனர். அப்பொழுது அம்மன் நகர் என்னும் பகுதியை நெருங்கிய பொழுது, இவர்கள் மூவரும் சென்ற வாகனத்திற்கு எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பலமாக மோதி இருக்கின்றனர்.

accident, seithipunal

இதன் காரணமாக, நிலைதடுமாறிய பிரியதர்ஷினி சாலையின் நடுவே விழ உடனடியாக பின்னாலிருந்து வந்த லாரி அவர் மீது ஏறி இருக்கின்றது. இதன் காரணமாக பிரியதரஷினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மற்ற இருவரும் சாலையோரத்தில் விழுந்ததன் காரணமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். திருமணம் முடிந்து ஏழு நாட்கள் மட்டுமே ஆகிய புதுப்பெண் விபத்தில் இறந்தது, அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in kallakurichi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->