வேகம் ஒருநாள் என்னைக் கொல்லும், யாரும் அழ வேண்டாம்.! பனை மரத்தில் மோதிய பல்சர்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் புதுக்குப்பத்தைச் எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் இவர் டிப்ளமோ படித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பல்சர் 220 இருசக்கர வாகனம் உள்ளது.

இந்தநிலையில், இன்று காலை ஆகாஷ் தனது நண்பன் ஏகேஷை அழைத்துக்கொண்டு பல்சர் பைக்கில் கடலூருக்கு சென்றுள்ளார். தலைக்கவசம் அணியாமல் ஆகாஷ் அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. சின்னாண்டிக்குழி சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனம் சாலையோர பனை மரத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஏகேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான ஆகாஷுக்கு சொந்தமான பல்சர் 220 வாகனத்தின் பின்னால் “ வேகம் ஒருநாள் என்னைக் கொல்லக்கூடும், அப்போது யாரும் அழ வேண்டாம்” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in cuddalore collge student died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->