திருச்சி || அரசு ஜூப் மோதி மாணவர் பலி.. மாணவி கவலைகிடம்..!
Accident at Trichy
அரசு ஜீப் மோதி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் வினோத் இவர் பொறியியல் கல்லூரி ஒன்று இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இந்நிலையில் சம்பவத்தன்று வினோத் தனது தோழியான பானுவுடன் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது லால்குடியில் இருந்து சிறுகனூர் நோக்கி அதிவேகமாக வந்த நெடுஞ்சாலை துறையின் அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பானு படுகாயமடைந்தார்.அங்கிருந்தவர்கள் பானுவை மீட்டு சிகிசசைக்காக அனுப்பி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வியாரணை மேற்கொண்டு வருகின்றனர்.