மயிலாடுதுறை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் கைது..!!
A youth who tried to sexually abuse a girl has been arrested
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மாப்படுகை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனை அடுத்து சம்பவதன்று, இரவு அந்த சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கார்த்திக் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே சிறுமியின் பெற்றோர் வந்துள்ளனர்.
அதற்குள் அங்கிருந்து கார்த்திக் தப்பி சென்றுவிட்டர். அதன் பிறகு சிறுமியிடம் இது குறித்து விசாரித்த போது தான் அவர்களுக்கு நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
English Summary
A youth who tried to sexually abuse a girl has been arrested