வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. பெரம்பலூர் அருகே நிகழ்ந்த சோகம்..!
A youth Committed suicide Near Perambalur
வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். சூரிய பிரகாஷ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வயதாகிக் கொண்டு வருவதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.
அதனை அவர்கள் சூரியபிரகாஷிடம் கூறியபோது அவர் வேலை கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கண்டிப்புடன் கூறியுள்ளார் மேலும் அதுவரை தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பல இடங்களில் வேலை தேடியும் அவருக்கு வேலை கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை 7 மணிவரை சூரியபிரகாஷ் என் படுக்கை அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அந்த அறையின் கதவை வேகமாக தட்டினர்.
அப்போது அறையின் கதவு திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சூரிய பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்.
சூர்யப்ரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A youth Committed suicide Near Perambalur