அரசு பேருந்து மோதி இளைஞர் பலி..!! சோகத்தில் மூழ்கிய கிராமம்..!!
a youngster died in accident near Kanniyakumari
சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணியூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெனிஸ் ஜான். இவருக்கு திருமணமாகி ஆன்சி சர்மிளா என்ற மனைவியும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. திருவனந்தபுரம் பகுதியில் மென்பொருள் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
ஜெனிஸ் வில்லுகுறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். குலசேகரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று தனது புது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தக்கலை அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி மருத்துவமப்னைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
a youngster died in accident near Kanniyakumari