பணம் நகைக்காக பல பெண்களை திருமணம் செய்தேன் புது மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த மாப்பிள்ளை..! - Seithipunal
Seithipunal


நகை பணத்திற்காக பல பெண்களை வாலிபர் திருமணம் செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பூவழகி (22). இவருக்கு கடந்த மார்ச் மாதம் பால்ராசு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக  சவரன் தங்க நகைகள், வீட்டிற்கு தேவையான சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர்.

 மேலும், பத்து சவரன் தங்க நகையும், இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 1  லட்சம் ரூபாய் பணமும் சிறிது நாட்கள் கழித்து தருவதாக கூறியுள்ளனர். கல்யாணமாம சில நாட்களிலேயே பால்ராசு பல பெண்களுடன் இருக்கும் செல்பிக்களை மனைவியிடம் காட்டியுள்ளார்.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூவழி இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு பல பெண்களை தான் திருமணம் செய்திருப்பதாகவும் உன்னை நன்றாக பார்த்து கொள்வேன் எனவும் பால்ராசு தெரிவித்துள்ளார். பூவழகியும் வேறு வழியின்றி அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனை அடுத்து, பால்ராசு தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார். மீதி வரதட்சணை வாங்கி வர சொல்லி பூவழகியை  அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.  இந்நிலையில், பூவழகி வீட்டிற்கு காவல்துறையினர் பால்ராசுவை தேடி வந்துள்ளனர்.

பால்ராசு சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், ஒரு பெண்ணை திருமணம் செய்து அவர் தற்போது கர்பமாக இருப்பதும் தெரியவந்தது. பணம் நகைக்காக பால்ராசு பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வருவது தெரியவந்தது.

இதனை அடுத்து, பெரம்பலூர் காவல்நிலையத்தில் பூவழகி புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள பால்ராசுவை தேடி வருகின்றனர். இந்தன் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man who married several women for money jewelry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->