மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை.! 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது.!
A young man was killed in a drunken dispute in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் சாலை, சின்னகன்னுபுரம் மதுபான கடை அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபரின், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட வாலிபர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த கார்த்தி(27) என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு, அந்த கட்டிடத்தில் இரவு கார்த்தி மது குடிக்க சென்றுள்ளார். அப்பொழுது, அங்கு மது குடித்து கொண்டிருந்த அழகேசபுரத்தை சேர்ந்த ராம்தேவ் மற்றும் 17 வயது சிறுவனுடன் கார்த்தி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ராம்தேவ், சிறுவன் ஆகிய 2 பேரும் கார்த்தியை அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் ராம்தேவ் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A young man was killed in a drunken dispute in Thoothukudi