அரியலூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.!
A young man killed in an unidentified vehicle collision
அரியலூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம், விரகாலூர் பகுதியை சேர்ந்தவர் ஆபேல்ராஜ்(29). இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஆபேல்ராஜ் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக ஆபேல்ராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே ஆபேல்ராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், உயிரிழந்த ஆபேல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A young man killed in an unidentified vehicle collision