#திருப்பூர் || தூக்கிட்டு பெண் தற்கொலை - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ் நகரை சேர்ந்தவர் குமார பாலசுதர்சன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மனைவி சாமுண்டீஸ்வரி(34). இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று வழக்கும் போல் குமார பாலசுதர்சன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சாமுண்டீஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

இதையடுத்து வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்த குமார பாலசுதர்சன் , மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சாமுண்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A women suicide in Tiruppur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->