பாபநாசத்தில் இறந்து கிடந்த பெண் பிணம்!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
A women death in babanasam bus stand
45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்துள்ளார். அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? யார் என்பது பற்றி விவரம் தெரியவில்லை.
பாபநாசம் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். எனவே பாபநாசம் இன்ஸ்பெக்டரான நாகரத்தினம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பெண்ணின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
விரைவில் அந்த பெண்மணி குறித்து தகவல் அறியப்பட்டு, அவரது மரணம் இயற்கையானதா என்பது கண்டுபிடிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
A women death in babanasam bus stand