மாமனார் மற்றும் கணவரை கட்டையால் அடித்த பெண்.! கோவை அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோவை அருகே மாமனார்-கணவரை கட்டையால் பெண் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சொக்கனூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால்(69) என்பவரது மகன் கார்த்திகேயன்(30). இவரது மனைவி ஜீவிதா (26). இந்நிலையில் கணவன்-மனைவியிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்தனர்.

இதனால் ஜீவிதா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து சம்பவத்தன்று ஜீவிதா, தனது தங்கை சத்தியா, அவரது கணவர் சக்திவேல், மற்றும் உறவினர் பாலா ஆகியோருடன் கணவர் வீட்டிற்கு சென்று மாமனார் ராஜகோபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவர்களின் சத்தம் கேட்டு வந்த கார்த்திகேயனும், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஜீவிதா மற்றும் அவரது குடும்பத்தினர், ராஜகோபால் மற்றும் கார்த்திகைனை திட்டி அங்கிருந்த மரக்கட்டையால் சரமாறியாக அடித்துள்ளனர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, பலத்த காயமடைந்த ராஜகோபால் மற்றும் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிணத்துக்கடவு போலீசார், ஜீவிதா, தங்கை சத்யா, அவரது கணவர் சக்திவேல் மற்றும் உறவினர் பாலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A woman who beat her father in laws husband with a stick in kovai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->