ரியல் எஸ்டேட் அதிபரிடம் தோழியாக நாடகமாடி...  பல கோடி அபேஸ்...கோவையில் பகீர்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் தோழியாக நடித்து ரியல் எஸ்டேட் அதிபரிடம்  கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை ஆண் நண்பர்களோடு திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சார்ந்தவர் ராஜேஸ்வரி இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சிங்காநல்லூர் பகுதியைச் சார்ந்த வர்ஷினி என்பவருக்கும்  தொழில் ரீதியாக நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் நட்பாக மாறியது.

இந்நிலையில் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்த வர்ஷினி அவருடன் நன்றாக பேசிவிட்டு அவரது உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இதனை சாப்பிட்ட ராஜேஸ்வரி மயங்கிய நேரத்தில் தனது ஆண் நண்பர் அருண்குமார் மற்றும் வாகன ஓட்டுனர் நவீன் குமார் ஆகியோருடன் சேர்ந்து  தொழிலதிபரின் வீட்டில் இருந்த 100% நகை வைர ஆபரணங்கள் மற்றும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் இந்தக் கொள்ளை சம்பவத்தில் வர்ஷினிக்கு உடந்தையாக இருந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர் பிரவீன் சுரேந்திரன் ஆகியோரை  காட்டூர் கிராமத்தில் வைத்து கைது செய்தனர். செல்போன் சிக்னல்களின் மூலம் காவல்துறைக்கு அவர்கள் இருக்குமிடம் பற்றிய துப்பு துலங்கியது. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வர்ஷினி மற்றும் அவரது ஓட்டுநர் நவீன் குமார் ஆகியோரை தீவிரமாக தேடி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a woman acted as a friend and looted muti crores from real estate tycoon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->