தர்மபுரியில்., ஐயா எங்களது ஊரில் இருந்த கிணற்றை காணவில்லை., கண்டுபிடித்து தாருங்கள்.! வடிவேல் நகைசுவை பணியில் நடந்த ருசிகர சம்பவம்.!!
a well is not on here please find it vadivel comedy on darmapuri
தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலக்கோடு சாலையில் உள்ள கிராமம் சேசப்ப நாயுடு கொட்டாய். இந்த பகுதியில் நீண்ட காலமாக இருந்த கிணற்றில் தண்ணீர் திடீரென வற்ற தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள கிணற்றை மக்கள் குப்பைகளை போடத் துவங்கியுள்ளனர். குப்பையை தொடந்து போட்டுக்கொண்டே இருந்த காரணத்தால் ஒரு சமயத்திக்கு மேல் குப்பைகளால் கிணறானது நிறைந்து கிணறு இருந்த தடமே தெரியாமல் போனது.
இந்நிலையில்., காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சீராமப்பு பணிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் வருகை தந்திருந்தார். அவரை காணச்சென்ற பொதுமக்கள் தங்களின் ஊரில் கிணறு ஒன்று இருந்ததாகவும்., அதனை தற்போது காணவில்லை என்றும்., காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தரக்கூறி புகார் மனுவும் அளித்தனர்.
இதனை கேட்டு ஒரு கணம் அதிர்ந்துபோன அமைச்சர்., சுதாரித்து பின்னர் கிணறு குறித்து கேட்ட போது அங்கிருந்த மக்களில் சிலர் கிணறு மூடியிருக்கலாம் என்றும்., கிணற்றின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து பேரூராட்சி செயல் அலுவலகர் மற்றும் அதற்குரிய அதிகாரிகளை உடனடியாக அழைத்து பேசிய அமைச்சர்., இந்த பிரச்சனைக்கு உடனடியாக தேர்வு காணும் படி அறிவுறுத்தினார். மேலும்., கிணறு குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில்., காணாமல் போன கிணறானது கோவிலுக்கு சொந்தமான கிணறு என்றும்., அதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது இந்த மாயமான கிணறு கோவிலுக்கு சொந்தமானது என்றும், எங்களுக்கு சொந்தம் இல்லை என்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பொதுமக்கள் காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தரக்கூறி காவல் துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதனை கேட்ட அதிகாரிகளுக்கு கந்தசாமி திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் நகைசுவை சம்பவம் நினைவிற்கு வந்து ஒருகணம் மெய்மறந்து சிரித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
a well is not on here please find it vadivel comedy on darmapuri