மீனவர் வேடத்தில் சுற்றி திரிந்த வாலிபர் செய்த காரியம்.! போலீஸ் விசாரணையில் பகீர்.!
A terrorist found from ramnadu
ராமநாதபுரம் பகுதியில் மீனவர் போல வேடமிட்டு, போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்த தீவிரவாதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சமீப காலமாகவே தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரத்தில் மீனவர் போல வேடமிட்டு, போலீசாரிடம் இருந்து தப்பித்து வந்த தீவிரவாதி தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
மேலும், காவல்துறை விசாரணையில் கைது செய்யப்பட்ட தாவூத் என்ற வாலிபர் அளித்துள்ள வாக்குமூலமானது அதிகப்படியான அதிர்ச்சிகளை ஏற்படுத்தி இருக்கின்றது. சமீபத்தில் களியக்காவிளை என்ற பகுதியில் பயங்கரவாதிகளால் எஸ்.ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இந்த தாவூத் தான் எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளுக்கு பண உதவி செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் முன்னதாகவே இந்த தாவுத் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
English Summary
A terrorist found from ramnadu