மாணவனின் உயிரை பறித்த படிகட்டு பயணம்... காஞ்சிபுரத்தில் நிகழந்த சோகம்..!
A student who was traveling on the stairs fell and died
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் , சயனாபுரம் புதுகண்டிகையை பகுதியில் வசித்து வந்தவர் தினேஷ்குமார் (18). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு வருவதற்காக தனியார் பேருந்தில் பணயம் செய்தார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர். அப்போது, தினேஷ்குமார் எதிர்பாராத விதமாக படியில் இருந்து டஹ்வறி விழுந்துள்ளார். பலத்தகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கினால் இது போன்ற உயிரிழப்புகளை தவிர்கலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
A student who was traveling on the stairs fell and died