இந்து மதத்தை தவறாக பேசிய ஆ.ராசா - நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு..! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் வெங்கடாஜலபதி. வக்கீலான இவர், இன்று நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்று கொடுத்து வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:- 

"நான் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீல் சங்க அலுவலகத்தில் இருந்த போது எனது செல்போனில் யூடியூப்பை பார்த்தேன். அதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியது தெரியவந்துள்ளது. 

மேலும் இந்து மக்களை பற்றியும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார். ஒரு இந்துவாக எனது மனம் மிகவும் வேதனையடைந்துள்ளது. தொடர்ந்து அவர் இதுபோன்று பேசி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A rasa speak wrong hinduism


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->