ஈரோடு கரோனா தொற்று உறுதியான பெண்ணிற்கு சிசேரியன் முறையில் அழகிய ஆண் குழந்தை..!!
a pregnant girl corona positive delivery by surgery male baby
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரம் பகுதியை சார்ந்த 32 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் வசித்து வந்தார். இவர் கரோனா வைரஸ் அறிகுறியுடன், அங்குள்ள பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்னதாக இவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இவருக்கு தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினத்தின் போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. கரோனா பாதிப்பு உள்ள பெண்மணிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, இவர் தமிழகத்தின் இரண்டாவது பெண்மணி ஆவார்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் இருவரும் நலமாக இருபவதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
a pregnant girl corona positive delivery by surgery male baby