கடன் பிரச்சனையால் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.!
A person suicide in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் பிரச்சனையால் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாடி நல்லூர் எஸ்.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் பூவேந்தன் (40). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் இவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மனவேதனையடைந்த பூவேந்தன் சின்னம்மாபேட்டை ரயில்வே பாதை அருகே உள்ள நாகாத்தம்மன் கோவில் பின்புறம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவாலங்காடு போலீசார் உயிரிழந்த பூவேந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person suicide in ranipet