பெரம்பலூர்: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
A person suicide in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி நடராஜ் (36). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் நேற்று முன்தினம் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் மனைவி மது குடிப்பதற்கு பணம் கொடுக்க மறுத்ததால், மனவேதனையடைந்த நடராஜ் தற்கொலை செய்து கொள்வதற்காக, வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் நடராஜன் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாடாலூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person suicide in Perambalur