கன்னியாகுமரியில் கார் மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் கார் மோதிய விபத்தில் வியாபாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியை சேர்ந்தவர் வியாபாரி அய்யப்பன் (68). இவர் இன்று அதிகாலை வியாபாரத்திற்காக மார்த்தாண்டம் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிரே வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென அய்யப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அய்யப்பன் சம்பவம் இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் உயிரிழந்த ஐயப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person killed in car collision in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->