20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு.!
A person fell into a 20 foot ditch and died
கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்து உள்ளார்.
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி தம்பிதுரை(55). இவர் நேற்று காலை கோத்தகிரிக்கு வேலை தேடி சென்றுள்ளார்.
பல இடங்களில் வேலை தேடி கிடைக்காததால் சொந்த ஊர் செல்வதற்காக கோத்தகிரி இருந்து பேருந்தில் மேட்டுப்பாளையம் சென்றார்.
இந்நிலையில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்துமாறு கூறி, முள்ளூர் கிராமத்தில் இறங்கி அங்குள்ள ஒரு பாலத்தில் உட்கார்ந்துள்ளார்.
அப்பொழுது பாலத்தில் இருந்து தவறி 20 அடி பள்ளத்தில் தம்பிதுரை விழுந்து உள்ளார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் தம்பு துறையை மீட்டு உள்ளனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தம்பிதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person fell into a 20 foot ditch and died