15 ஆடி உயரத்தில் நின்று பெயிண்ட் அடித்த வடமாநில தொழிலாளி.! தவறி கீழே விழுந்து பலி.!
A North State worker died after falling from a height of 15 feet in kovai
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15 அடி உயரத்தில் நின்று பெயிண்ட் அடித்த வட மாநில தொழிலாளி தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பால்(27). இவர் கோவை மாவட்டம் அன்னூரில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராம்பால் அன்னூரில் உள்ள தனியார் பள்ளிக்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்று உள்ளார்.
அப்பொழுது அங்கு 15 அடி உயரத்தில் நின்று பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராம்பாலை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராம்பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அன்னூர் காவல்துறையினர், ராம்பாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A North State worker died after falling from a height of 15 feet in kovai