விளையாட சென்ற சிறுமிக்கு, வலைவிரித்த வாலிபன்.! விழித்துகொண்ட சிறுமி, கைதாகிய காமூகன்.!
A men try to rape an young girl
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம், உப்பூர் என்ற கிராமத்தில் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஒரு நபருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். மூத்த பெண்ணிற்கு 13 வயதும், இளைய மகளுக்கு ஏழு வயதும் நடைபெற்று வந்துள்ளது.
இந்த குழந்தைகள் இருவரும் எப்பொழுதும் தெருக்களில் மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் விளையாட செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். இந்த பழக்கமானது பொதுவாக அனைத்து கிராமங்களிலும் இருக்கும். இந்த நிலையில் 13 வயதான மூத்த பெண் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கையில், வீட்டிற்கு அருகில் வசிக்கும் லட்சுமணன் என்ற இளைஞன் சிறுமியிடம் பேச்சு கொடுத்து இருக்கின்றார்.
பின்னர் அந்த சிறுமியை தனது காமப் பசிக்கு இரையாக்க நினைத்து, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியிடம் அத்துமீற முயன்றதை உணர்ந்து கொண்ட சிறுமி, அந்த கயவன் இடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடி வந்தாள். பின்னர் தனது தாய் மற்றும் தந்தையுடன் இது குறித்து கூறி அழுதிருக்கிறார்.
உடனடியாக அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர், திருத்துறைபூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், லட்சுமணன் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சிறுமியிடம் அத்துமீறிய லட்சுமணனைக் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
English Summary
A men try to rape an young girl