திருமணத்தை மீறிய தகாத பழக்கம்.! சகலைக்கு சரமாறி வெட்டு.!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் தனது மனைவியின் சகோதரியோடு உல்லாசம் அனுபவித்த வாலிபர், கள்ளாக்காதலியின் கணவரால் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் கேடிசி நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வரும் பிரேம் குமார் என்பவரும், அதே பகுதியில் வசித்து வரும் விக்னேஸ்வரன் (28 வயது) என்பவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கையை திருமணம் செய்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் பிரேம் குமாருக்கு விக்னேஸ்வரனின் மனைவியுடன் தகாத பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது அப்பெண்ணின் கணவர் விக்னேஸ்வரனுக்கு தெரியவந்துள்ளது. எனவே, பிரேம் குமாரை கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமையில் பிரேம்குமாரை அவரது கள்ளக்காதலி வீட்டிற்கு உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். 

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட விக்னேஸ்வரன், மேலும் 3 பேரை அழைத்துக்கொண்டு பிரேம்குமாரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்து படுகாயமடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இருப்பினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இந்த கொலை குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் விரைந்து வந்து கொலை செய்த விக்னேஸ்வரன் மற்றும் அவருடைய நண்பர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A men killed her wife's illegal affair 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->