இளம்பெண் குறித்து முகநூலில் அவதூறு.. திண்டுக்கல் புள்ளிங்கோ கைது.!!
a man spread fake details about girl now under arrest in dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடை அடுத்துள்ள தருமபுரி பகுதியை சார்ந்தவர் அருண் குமார். இவர் அப்பகுதியை சார்ந்த இளம்பெண்ணின் நடத்தை குறித்து அவதூறாக மற்றும் ஆபாசமாக பல தகவல்களை பதிவு செய்து வந்துள்ளான்.
இவன் போலியான முகநூல் கணக்கை வைத்துக்கொண்டு, இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அருண்குமார் தனது நண்பனின் அலைபேசியில், பெண் பெயரை கொண்ட போலி முகநூல் கணக்கை துவங்கியுள்ளான். இதன் மூலமாக தவறான கருத்துக்களை பரப்பி வந்த நிலையில், அருண்குமார் மற்றும் அவனது நண்பனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
a man spread fake details about girl now under arrest in dindigul