தலைக்கேறிய மது போதை.. 100 ரூபாய் கொடுக்காததால் கொத்தனார் துணிகரம்..! - Seithipunal
Seithipunal


100 ரூபாய் பணம் தராததால் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (50). இவர் அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர் கொத்தனராக பணியாற்றி வருகிறார்.

பணி முடிந்ததும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று வழக்கம் போல இருவரும் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது பூபதி சிவக்குமாரிடம் 100 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அதற்கு சிவக்குமார்  மறுக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த பூபதி அருகில் இருந்த இரும்பு கம்பியால் சிவகுமாரை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தலைமறைவாக இருந்த பூபதி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Man Murder Near Avadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->