"யாருடன் செல்போனில் பேசுகிறாய்" மனைவியை கொன்ற கணவன்..!! பெரம்பலூரில் பரபரப்பு..!!
A man murder his wife Near perambalur
மனைவி மீது சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், பசும்பலூரை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி தகாராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாருடனோ செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்ட சுரேஷ் புஷ்பா மீது சந்தேகப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து சம்பவதன்று, செல்போனில் யாருடன் பேசி கொண்டிருக்கிறாய் என்று புஷ்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்படுள்ளார். வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றவே அருகில் இருந்த கட்டையால் அவரை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த புஷ்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனினேய் அவர் உயிரிழந்தார்.
இதனை அடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A man murder his wife Near perambalur