பணத்தாசையில் சூது.. ஹை ஜம்ப் அடித்து பரிதாப பலியான சோகம்.! குடும்ப குறித்த விசாரணையில் பெரும் சோகம்.!!
a man jump from first flood for police alert during illegal money earn
தமிழகத்தின் சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளின் மத்தியில் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் மாடியில் தனியாருக்கு சொந்தமாக சூதாட்ட கிளப் செயல்பட்டு வந்த நிலையில்., இங்கு பணம் வைத்து சூதாட்டம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.
இது தொடர்பான புகார்கள் புளியந்தோப்பு காவல் துறையினருக்கு தொடர்ந்து கிடைக்கப்பெற்றதை அடுத்து., தனிப்படை காவல் துறையினர் இதற்கான ரகசிய விசாரணை மேற்கொண்டு., நேற்று இரவு அதிரடியாக சூதாட்ட கிளப்பிற்கு விரைந்தனர். இந்த சமயத்தில்., பணம் வைத்து சூதாட்டம் செய்வது தெரியவந்தது. மேலும்., காவல் துறையினரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர்.
இந்த சமயத்தில்., காவல்துறையினர் வசம் சிக்காமல் இருப்பதற்கு நபரொருவர் மாடியில் இருந்து கீழே குதித்த நிலையில்., கீழே இருந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையின் மேற்கூரையினை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தார். இதனைத்தொடர்ந்து பீட்டர் (வயது 45)., செழியன் (வயது 33)., ராஜி (வயது 32) மற்றும் ராஜசேகர் (வயது 41) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் வழக்கறிஞர்கள் மூலமாக நால்வரும் ஜாமினில் வெளியான நிலையில்., தொழிற்சாலையில் விழுந்த நபர் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இவர் கொண்டியதோப்பு பகுதியை சார்ந்த குமார் (வயது 40) என்பதும்., இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 6 மாதமேயான பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
Tamil online news Today News in Tamil
English Summary
a man jump from first flood for police alert during illegal money earn