கட்டிட வேலை செய்ய சென்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். செல்லையா அந்த பகுதியில் சப்ஜெக்ட் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவர் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது மின் கம்பிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த கம்பியில் இரும்பு கம்பிகள் பட்டு செல்லையா மீது மின்சாரம் தாக்கியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வேலை செய்பவர்கள் மின்வாரியத்திற்கு தகவல் அளித்து மின்சாரத்தை நிறுத்தினர். இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் செல்லையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man Death Nea Tthanjavur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->