தொடரும் கந்து வட்டி கொடுமை..!! திருவாரூரில் இளைஞர் தற்கொலை..!!
A man commited to suicide due to Usury interest
கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் தொடர்கதையாகியுள்ளது.
திருவாரூர், விஜயபுரம் மேட்டுபாளையம் தெருவில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையும் உள்ளது.
சதீஷ் அந்த பகுதியில் பழைய இரு சக்கரவாகனங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். தனது கடைக்காவும், குடும்ப செலவுக்காகவும் திருவாரூர் முத்தையன் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், முத்தையன் தந்த கடனை திரும்ப கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். கொரோனா காரணமாக தொழில் சரியா நடக்காததால் அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் முத்தையன் சதீஷை தாக்கி அவருடைய இருசக்கர வாகனத்தை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அதனை ஏற்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையில், தொடர் தொல்லையாலும் அவமானத்தாலும் சதீஷ் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர்.
ஆரம்பத்திலேயே இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காதது தான் இந்த தற்கொலைக்கு காரணம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சதீஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
A man commited to suicide due to Usury interest