கடும் வயிற்று வலி...!! விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி..!!
A man commited to suicide
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் வசித்து வருபவர் முருகன். இவர் அந்த பகுதியில் விவசாயியாக இருந்துள்ளார். இவர் சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வயிற்று வலிக்கு பல மருத்துவர்களிடம் சென்று அவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு வலி சரியாகவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவதன்று வயிற்று வலியால் அவதி பட்டுவந்துள்ளளார். இதனால், அவர் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
.
English Summary
A man commited to suicide