திருவண்ணாமலை || ஆட்சியர் அலுவகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி..! - Seithipunal
Seithipunal


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் தனது இரண்டு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆட்சியர் காரிலிருந்து இறங்கும் பொழுது அவர் தான் வைத்திருந்த மண்னென்னையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்  மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்விரோதம் காரணமாக அவரை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man attempting Suicide Front Of Collector office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->