வீட்டிற்குள் அலறிய பெண்மணி... காப்பாற்ற வந்தவருக்கு கத்திக்குத்து.. காமுகனால் அரங்கேறிய சோகம்.!!
A man arrest rap attempt married girl and murder attempt
திருமணம் முடிந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நிலையில், இதனை தட்டிக்கேட்ட நபரை கொலை செய்யும் முயற்சி அரங்கேறியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசீபுரம் பகுதியை சார்ந்த திருமணம் முடிந்த பெண்மணி கணவருடன் வசித்து வருகிறார். இந்த பெண்மணியை ராமசாமி என்பவன் பல நாட்கள் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளான்.
இந்நிலையில், சம்பவத்தன்று காமுகன் பெண்மணியின் இல்லத்திற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான். பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரரான கார்த்திக் என்பவர், வீட்டிற்குள் விரைந்துள்ளார்.
விபரீதம் புரிந்துகொண்ட நபர் பெண்மணியை காப்பாற்றிய நிலையில், காமுகன் ராமசாமி கார்த்திக்குடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கொடூரன் கார்த்திக்கை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளான்.
இதனையடுத்து கார்த்திக்கை அப்பகுதி மக்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
A man arrest rap attempt married girl and murder attempt