காதல் மணம்முடித்து குடும்பம் நடத்திய மகள்.. தாய்க்கிழவியின் தரமான சம்பவம்.. நொறுங்கிப்போன காதலன்.!!
a Love Married couple separated by family members due to without document
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மஞ்சக்கொல்லை புதூர் பகுதியைச் சார்ந்த, கணவனை இழந்த பெண் அனுராதா. இவரது மகள் நந்தினி. இவர் பி.எஃப் படித்து முடித்துவிட்டு பயிற்சி ஆசிரியையாக இருக்கிறார். இவரும், அதே பகுதியில் உணவகம் ஒன்றில் சர்வராக பணியாற்றி வந்த அச்சுதன் என்பவரும், கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் தாயார் அனுராதாவிற்கு தெரியவரவே, அச்சுதன் தாய் தந்தை இல்லாத ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதால், நந்தினியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது மகளுக்கு வசதியான வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதனையடுத்து காதல் ஜோடிகள் இருவரும், கடந்த 20 ஆம் தேதி கோவைக்கு சென்று அங்குள்ள கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.
இதன்பின்னர், ஒண்டிப்புதூர் பகுதியில் ஒரு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், அச்சுதனின் நண்பர் மூலமாக காதல் ஜோடி கோவையில் இருக்கும் தகவலை அறிந்த அனுராதா, தனது உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்று மகள் நந்தினி மற்றும் மகளின் காதல் கணவனிடம் ஊரறிய திருமணம் செய்து வைப்பதாக கூறி பேச்சு நடத்தி காரில் அழைத்து வந்துள்ளார்.
சேலம் சுங்கச்சாவடி அருகே உணவகத்தில் உணவு அருந்திய நிலையில், தனது மகளை பதிவு திருமணம் செய்யவில்லை என்பதும், கோவிலில் மாலை மாற்றி கொண்டு திருமணம் செய்ததும் தெரிய வந்துள்ளது. உணவருந்தி விட்டு வந்த புது மாப்பிள்ளையை நையப்புடைத்து, காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு மகள் நந்தினியை தங்களுடன் தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காதல் மனைவி கடத்தப்பட்டு விட்டதாக அச்சுதன் காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்ற நிலையில், இவர்கள் இருவரின் திருமணத்திற்கு பதிவுச் சான்று இல்லை என்பதால், புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் அவரை திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் ஆசிரியை காதல் வலையில் வீழ்த்திய சர்வர், வீதியில் திகைத்து நிற்கிறார்.
Tamil online news Today News in Tamil
English Summary
a Love Married couple separated by family members due to without document