1 லட்ச ரூபாய்க்கு 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய கந்து வட்டிக் கும்பல்…! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறை…! வைரலாகும், பெண்ணின் கதறல் வீடியோ..! - Seithipunal
Seithipunal


 

சிவகங்கை மாவட்டம், லாடனேந்தலைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி (வயது 48). இவரது கணவர், செந்தில்குமார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர்களுக்கு, திருப்புவனம் பன்னீர் செல்வம், லாடனேந்தலைச் சேர்ந்த கீதா, பானுமதி, மதுரை சதீஸ்குமார் ஆகியோர், 1 லட்சம் கடன் கொடுத்து விட்டு, 6 லட்ச ரூபாய் வரை வட்டி வசூலித்துள்ளனர்.

இது போதாதென்று, மேலும் 4 லட்சம் வட்டிப் பணம் வேண்டும் என்று, இந்தக் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால், மிகவும் விரக்தி அடைந்த மாரீஸ்வரி குடும்பத்தினர், இது குறித்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், மனம் உடைந்த மாரீஸ்வரி, தற்கொலை செய்ய முடிவெடுத்தார். தற்கொலைக்கு முன்பாக, கந்து வட்டிக் கொடுமையால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தான் இறந்த பின்பு, தன் கணவரையும், பிள்ளைகளையும், அந்தக் கந்து வட்டிக் கும்பலிடமிருந்து காப்பாற்றும் படி கதறி அழுத வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

விஷம் அருந்திய மாரீஸ்வரி, தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

இது குறித்து, தற்போது மதுரை ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a lady video, before her suicide attempt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->