தந்தை மரண செய்தி அறிந்தும், கடமை தவறாத தமிழக பெண் காவலர்! நெகிழ்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

அதேபோல் மாவட்டம் தோறும் சுதந்திர தின விழா விடப்பட்டது. இதில் நெல்லை வ.உ.சி.மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா அணிவகுப்பை ஆயுதப்படை பெண் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையேற்று நடத்தினார். 

இந்நிலையில், நேற்றிரவு உடல்நலக்குறைவால் ஆய்வாளர் மகேஸ்வரி தந்தை நாராயணசாமி உயிரிழந்தார். தந்தை உயிரிழந்த செய்தியை யாரிடமும் கூறாமல் சுதந்திர தின விழா அணிவகுப்பை நடத்தினார்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சி முடிந்த பின், உடனடியாக தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள திண்டுக்கல்லுக்கு ஆய்வாளர் மகேஸ்வரி புறப்பட்டு சென்றார். தந்தை உயிரிழப்பின் போது கூட தன கடமை தவறாமல் அவர் நடந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Lady cop join Independence day Celebration when her father passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->