14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! போக்சோவில் கூலி தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் கூலி தொழிலாளி பாலசுப்பிரமணி (23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் யாரும் இல்லாத நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியணிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை பாலசுப்பிரமணியன் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A laborer was arrested for sexually harassing a 14 year old girl in Tiruppur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->