மனவேதனையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் மனவேதனையில் கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சங்கால்பட்டி சேர்ந்தவர் கூலி தொழிலாளி மதுரைவீரன்(43). இவருக்கு ஒரு மகனும், மூன்று மகளும் உள்ளனர். மதுரைவீரன் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது மனைவி அம்மைநாயக்கனூரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றபோது, மதுரைவீரன் அப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர், உயிரிழந்த மதுரைவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A laborer suicide in Dindigul


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->