வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய கூலி தொழிலாளி.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூலி தொழிலாளி வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பாவளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (42). இவரது மனைவி பூங்கொடி. இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு ராஜா சென்றுள்ளார்.

பின்பு வெகு நேரமாகியும் ராஜா வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இதையடுத்து பல இடங்களில் தேடியும் ராஜா கிடைக்காத நிலையில், மல்லாபுரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து, வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A laborer hanged from a neem tree in kallakurichi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->