வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த காம கொடூரன்..! இறுதியில் நேர்ந்த சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகில் பல விதமான துயரங்கள் அரங்கேறிக்கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகளில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் நம்மை பெரும் துயருக்கு உள்ளாக்குகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. 

கரூர் மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையம் அருகேயுள்ள மோதுகாடு பகுதியை சார்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவியின் பெயர் சரண்யா (வயது 26). மணிகண்டன் அங்குள்ள பரமத்தி வேலூர் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் பணியாற்றி வருகிறார். 

இவர்களின் வீட்டிற்கு அருகில் மோகன்ராஜ் (வயது 34) என்ற காம கொடூரன் வசித்து வந்துள்ளான். இந்த நிலையில்., நேற்று மாலை நேரத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்த சரண்யாவை பார்த்து., நான் உன்னை விரும்புகிறேன்... என்னை திருமணம் செய்து கொள் என்று மோகன்ராஜ் கூறியுள்ளான். 

rape, seithipunal

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சரண்யா செருப்படி வாங்கிவிடுவாய் என்று எச்சரிக்கவே., காம கொடூரன் மோகன்ராஜ் சரண்யாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளேன். பதறிப்போன சரண்யா சத்தமிடவே., இது குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான். 

இதனையடுத்து தனது கணவரிடம் இது குறித்து சரண்யா தெரிவித்ததை அடுத்து., மணிகண்டன் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl rapped in karur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->