போலீஸ்னா என்ன வேணா பேசுவியா.? பளாரென அறைந்த தருமபுரி இளம்பெண்.!!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி இலக்கியம் பட்டியைச் சேர்ந்த குப்பம்மாள் என்பவர் தனது பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினை குறித்து புகார் அளிக்க பி1 போலீஸ் ஸ்டேஷன்க்கு வந்துள்ளார். தனது மகள் விஜயாவுடன் கடந்த 25ஆம் தேதி விசாரணைக்கு சென்றுள்ளார். விஜயா மற்றும் குப்பம்மாள் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தியிடம் முறையிட்டபோது பெண் எஸ்ஐ கிருஷ்ணவேணி ஸ்டேஷனுக்குள் நுழைந்துள்ளார்.

தனது தாயின் சொத்து ஏமாற்றப்படுவது தாங்கிக்க முடியவில்லை என விஜயா மிகவும் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட கிருஷ்ணவேணி இது என்ன ஸ்டேஷனா? சந்தைக்கடையா.? என கூறி விஜயாவை மிகவும் தரம் தாழ்த்தி திட்டியுள்ளார். இதனால், ஆவேசமடைந்த விஜயா யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுறே? போலீஸ்னா என்ன வேணாலும் பேசலாமா? என ஓங்கி பளார் என கன்னத்தில் அறைந்துவிட்டார்.

இதை எதிர்பார்க்காத காவலர்கள் உடனடியாக விஜயாவை தனி அறைக்கு அழைத்துச் சென்று கண்டித்ததுடன், அவர் மீது பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து எஸ் ஐ கிருஷ்னவேணியிடம் பேசியபோது அவர் பதில் அளிக்காமல் நழுவிவிட்டார். உதவி ஆய்வாளர் ரத்னகுமார், விஜயா ஆவேசத்துடன் எஸ் ஐயை தாக்கிவிட்டார். இதனால்தான் வழக்கு பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது. எஸ்ஐ விஜயாவை தரக்குறைவாக எல்லாம் பேசவில்லை என எஸ்ஐக்கு ஆதரவாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A girl attack polie women


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->