விருதுநகர் || மருத்துவமனை கட்டில் உடைந்து பிறந்து ஐந்து நாட்களே ஆன குழந்தை படுகாயம்..! - Seithipunal
Seithipunal


மருத்துவமனையின் கட்டில் உடைந்ததால் பிறந்து 5  நாட்களே ஆன உடைந்ததால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் பரங்கிநாதபுரத்தில் வசித்து வருபவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி இரண்டாவது பிரசவத்திற்காக புதன்கிழமை விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வியாழகிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை அவர்கள் இருந்த கட்டில் உடைந்தது. இதில், குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம்  ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்தும் குழந்தையை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், விருதுநகர் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிகிச்சைக்கு தாமதமானதால் பெற்றோர் தங்கள் சொந்த முயற்சியில் குழந்தையை அழைத்து சென்றனர். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பிற தாய்மார்கள் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A five day old baby boy was injured when his hospital bed broke


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->