பள்ளியில் இருந்த சிறுமிகளை, அழைத்து வந்து தந்தை செய்த மோசமான காரியம்.!   - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கும்பகோணம் அரசு பள்ளி ஒன்றில் இரண்டு சிறுமிகள் படித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்த பொழுது அவரது தந்தை இருவரையும் பள்ளியிலிருந்து அழைத்து வந்துள்ளார்

அப்போது மிகவும் குடிபோதையில் இருந்த தந்தை 2 சிறுமிகளையும் சற்றும் ஈவு, இரக்கம் இல்லாமல் அருகில் இருந்த ஆற்றில் தூக்கி வீசி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றார்.

river, seithipunal

தண்ணீரில் தூக்கி வீசப்பட்ட இரண்டு சிறுமிகளும் தத்தளித்து கூச்சலிட்டதை பார்த்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டு எடுத்தனர். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமிகளிடம் விசாரித்தபோது, தன்னையும் தன்னுடைய தங்கையையும் தந்தை கோபத்தில் ஆற்றில் தூக்கி வீசி விட்டார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சிறுமிகளின் குமுறல் காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Father trying to murder in his children


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->