வயலுக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்.. கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்ட அல்லி எம் சருவுளூரை சேர்ந்தவர் முருகன். இவர் அந்த பகுதியில் விவசாயிகளை இருந்து வருகிறார் .சம்பவத்தன்று வயலுக்கு மின் மோட்டார் மூலம் நீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்துள்ளது.

நீண்ட நேரமாகியும் அவர் அவரது உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயலுக்கு  நீர் பாய்ச்ச சென்ற சாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A farmer who went to water a field was electrocuted


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->