குடிகார கபோதியால் அரங்கேறிய சோகம்.. உறங்கிய முதியவரை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட பரிதாபம்.!!
a Drunken culprit killed innocent Old man
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விப்பேடு கிராமத்தை சார்ந்தவர் கணேஷ் (வயது 30). இவரது நண்பர் ஜெகன் (வயது 30). இவர்கள் இருவரும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்திய நிலையில், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கணேஷ், ஜெகனை அடித்து உதைக்கவே, ஜெகன் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார். மேலும், வழக்கமாக படுத்து உறங்கும் ரேஷன் கடை அருகே ஜெகன் படுத்து உறங்காமல், தேவாலயம் அருகே படுத்து உறங்கியுள்ளார்.
அந்த நேரத்தில், ரேஷன் கடையில் முதியவர் படுத்து உறங்கிய நிலையில், மதுபோதையில் வந்த கணேஷ், முதியவரை ஜெகன் எடுத்து நினைத்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளான். இதனால் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அடித்ததற்கு பின்னர் தான் மாற்று நபரை தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பயந்துபோன கணேஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்லவே, இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த முதியவர் இதே ஊரை சார்ந்த எட்டியப்பன் (வயது 70) என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
a Drunken culprit killed innocent Old man