அழுகிய நிலையில் பிணமாக கிடந்த இளம்பெண்!! பூட்டியவீட்டை திறந்து பார்த்தோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!  - Seithipunal
Seithipunal


பனியன் கம்பெனி உரிமையாளர் திருமுருகன்பூண்டி வெளியூரில் இருந்து வரும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய வசதியாக 10 வீடுகளை நெசவாளர் காலனியில் உள்ள தோட்டத்தில் கட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில், அங்குள்ள நான்காவது வீட்டில் மிக மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால், அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளனர். அங்கு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடந்ததை அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

பின்னர் போலீசார் அங்கு வந்து உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்துள்ளனர்.புதுக்கோட்டையை சேர்ந்த கயல்விழி (21)என்பவர் என்பது தெரியவந்தது. 

இவர் அதே நிறுவனத்தில் வேலை பார்த்த விக்னேஷ் என்பவரை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர் கயல்விழி விக்னேஷுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? இதனால், விக்னேஷ் ஓடி விட்டாரா?

அல்லது கயல்விழியை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், விக்னேஷ் எந்த ஊரை சார்ந்தவர் என்பதும் தெரியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A dead body in tripur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->