பாம்பை எலி என்று நினைத்து சோறு வைத்த சிறுமி.. துடிதுடிக்க வாயில் நுரைதள்ளி உயிரிழந்த பரிதாபம்..!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வாஞ்சியூர் கிராமத்தை சார்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் சுதர்சன் என்ற 10 வயது மகனும், தஸ்விந்தா என்ற 6 வயது மகளும் இருக்கின்றனர். 

இந்நிலையில், கடந்த ஆறாம் தேதி சிறுமி தஷ்விந்தா தனது இல்லத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இவரது வீட்டின் சுவற்றில் உள்ள வெடிப்பில் இருந்த நாகம் ஒன்று வாயை நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. 

இதனைகண்டுகொண்ட சிறுமி பாம்பை எலி என்று நினைத்து, மழலை உள்ளத்துடன் அதற்கு உணவு வைக்க சத்துமாவு உருண்டையை சுவற்று வெடிப்பில் போட்டுள்ளார். சிறுமி தன்னை தீண்ட வருவதாக எண்ணிய நாகம் சிறுமியின் கைகளில் தீண்டியுள்ளது. 

இதனையடுத்து சிறுமி அலறியபடி தன்னை எலி கடித்துவிட்டது என்று அக்கம் பக்கத்தினரிடம் கூறவே, அவர்கள் விரைந்து வந்து பார்க்கையில் உள்ளே இருந்தது நாகம் என்பது தெரியவந்துள்ளது. பாம்பின் விஷ வீரியத்தால் சிறுமி மயங்கியுள்ளார். 

சிறுமியை விரைந்து அங்குள்ள மன்னார்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுமிக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லாது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A child died snake byte in Thiruvarur Mannarkudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->