காணாமல் போன சிறுவனை இணைய மூலம் மீட்ட பெற்றோர்!! உண்மையறியாத இணையவாசிகள் செய்த காரியம்!!  - Seithipunal
Seithipunal


மேட்டுப்பாளையத்தில் வழிதவறி போய் காணாமல் போன சிறுவனை, சமூகவலைதளங்களால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில்  காவல்நிலையத்தில் இருந்து பெற்றோர்கள் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் காவல்நிலையம் அருகே உள்ள அரோமா பேக்கரி என்ற இடத்திற்கு முன்பு 3 வயது சிறுவன் ஒருவன் வழிதெரியாமல் சுற்றிதிரிந்து கொண்டிருந்துள்ளான். இதை கவனித்த சமூக ஆர்வளரான கணேசன் என்பவர் இந்த சிறுவனை மீட்டுள்ளார்.

பின்னர், அங்கிருந்து சிறுவனை அழைத்து சென்று மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மிகவும் சிறிய பையனாக இருந்தகால், காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவனிடம் அவனது பெற்றோர் மற்றும் ஊர்குறித்த விவரங்களை விசாரித்த பொழுது, அவனுக்கு சொல்லத் தெரியவில்லை.

Image result for social media செய்திபுனல்

இதனை தொடர்ந்து சிறுவன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இருப்பதாகவும், சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் சமூக வலைத்தளம் மூலம் செய்திகள் பரப்பப்பட்டது. இதன் மூலம் தகவல்கள் கிடைத்த பெற்றோர் அந்த சிறுவனை வந்து அழைத்து சென்றனர். 

ஆனால், சிறுவன் பெற்றோரிடம் கிடைத்த பின்னரும் அந்த புகைப்படம் மற்றும் காவல் நிலைய தொடர்பு எண்கள் சமூக வலைத்தலங்களில் பறப்பது வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A boy recover by social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->